Monday, May 16, 2016




                நான் இறந்த பின் என்னை எங்கு புதைக்க வேண்டும் என்று கேட்டால்,                   சிறிதும் யோசிக்காமல் சொல்வேன் அவள் கன்ன குழிகளில் என்று.

Saturday, May 14, 2016

என்னுள் நீ - பகுதி 3




               கோடை வெயிலில் நான் மட்டும் குளிமையாய் உணர்ந்தேன் அந்த காபி ஷாப்பின் கூரையினுள். நான் இங்கு வருவது இதுவே முதல் முறை. அதுவும் என் நண்பர்களுடன். எனது வாழ்நாளின் விலையுயர்ந்த காபியை குடித்துக்கொண்டிருக்கிறேன். என்னை போன்ற நடுத்தர வர்க்கத்திற்கு இவ்வளவு  விலையுயர்ந்த காபி இருக்கிறதா என்று கூட தெரியாது.

                அந்த காபி ஷாப்பின் கதவு ஒவ்வொரு முறை திறக்கையிலும் மணி சத்தம் ஒலிக்கும். அப்படி ஒரு முறை திறக்கையில், காபியின் மீது இருந்த என்னுடைய ஆர்வம் காற்றில் கலந்த புகையாய் போனது.

               பத்து நாட்களாய் என்னை பாடாய் படுத்தும் ராட்சசி, என் கனவுகளின் நாயகி, என் கனவுக் கோட்டையின் இளவரசி என் "சாரா " வந்திருக்கிறாள். எனக்குள்ளே பூத்த சந்தோசத்தால் வாயில்  புன்னகை.

                எனக்கு இரு இருக்கைக்கு முன்னால் அமர்ந்தாள். ஒரே நொடியில் அங்கிருந்த அனைவரின் பார்வையையும் ஈர்த்தாள் என் சாரா. ஆனால் பெரும் பாக்கியசாலியான அந்த காபி ஷாப்பின் கதவு மட்டுமே அவளுடைய கவனத்தை ஈர்த்தது. யாருக்காகவோ காத்திருக்கிறாள் என்பது தெரிகிறது. யாருக்காக காத்திருக்கிறாள்? உறவினர்களுக்காகவா? இல்லை நண்பர்களுக்காகவா? ஒரு வேலை காதலனாக இருக்குமோ?? ஐயோ! என் சாரா காதலிக்கிறாளா?? இத்தனை கேள்விகளும் என் மண்டைக்குள் மத்தளம் போட்டுக்கொண்டிருந்தது.

                இளம் பெண்களை எளிதில் கவரும் தோற்றம் கொண்ட ஒரு இளைஞன் காபி ஷாப்பின் உள்ளே நுழைந்தான்.

               இன்னும் அரை நிமிடத்தில் நின்று விடுவோம் என்று என் இதயம் அறிந்திருக்கவில்லை. ஆம், என் சாரா பெரிய புன்னகையுடன் அவனை வரவேற்று, அமர வைத்தாள். ஒரு வேலை அவன் அவள் காதலனாக இருந்தால், அவளை " என் சாரா " என்று கூப்பிடுவது சரியாக இருக்காது. அவள் எனக்கானவள் இல்லை. என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கண்கள் கலங்கின. இன்னும் இரண்டு நிமிடம் அங்கு இருந்தால், என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியாது. என் நண்பர்களை விரைவாக அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டேன். ஆனால், என்னுள் ஏதோ ஒன்றை விட்டு செல்வது போல் ஒரு தோணல். ஆம். விட்டு செல்கிறேன், என் உடைந்து போன இதயத்தை.

                               
                                                                                                              16 ஜூன், 2008
                                                                                                   
             நண்பா,
                            நான் இன்று உடைந்துவிட்டேன். இதை உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆனால், அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.

                       என் சாரா எனக்கானவள் இல்லை. என் வாழ்வில் வந்த முதல் பெண் இவள் தான். இந்த பத்தே நாட்களில் இவள் தான் என் வாழ்க்கை என்பது போல் மாற்றிவிட்டாள். இதெல்லாம் முட்டாள் தனமாகத்தான் இருக்கிறது. ஆனால், என்னுள் அவள் எப்படி வந்தாள் என்பது விடை தெரிய புதிராகவே இருக்கிறது.


       
           

Saturday, April 9, 2016

கண்ணாடி கதவு



                                            கண்ணாடி கதவு 


                                      உன்னுடன் கைக்கோர்க்க  ஆசை
                         அந்த கையை என்றும் விடாமல் இருக்க ஆசை 
                            உன்னை அணைத்து ஒரு நடனமாட ஆசை 
                         ஒரு குழந்தை போல் உன்னை தூக்கி சுமக்க ஆசை 
          ஆனால் நமக்கிடையில் ஜாதி, மதம், இனம், அந்தஸ்து என்னும் கண்ணாடி கதவு இருக்கும் வரை என்னால் உன்னை தீண்டக்கூட முடியாது. எத்தனையோ பேர் அக்கண்ணாடி கதவை உடைக்க முயன்று தோற்றே போனார்கள். நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. என்றோ ஒரு நாள் அக்கண்ணாடி உடையும். அது வரை காத்திருப்போம். 

Monday, April 4, 2016

என்னுள் நீ - பகுதி 2




                                               கல்லூரியின் முதல் நாள் 


                    கல்லூரியின் முதல் நாள் இன்று. ஒரு வாரத்திற்கு முன்பே கல்லூரி செல்வதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி, அழகாக முடி வெட்டி தயார் ஆகிவிட்டேன். இனி இந்த uniform எல்லாம் போடா வேண்டாம் என்று நினைக்கும்போது சந்தோசமாக இருக்கிறது. ஆனால் புது இடம், புது நண்பர்கள், சீனியர்கள் என்று நினைக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது.


Thursday, March 24, 2016

என்னுள் நீ - பகுதி 1


                                                   என்னுள் நீ 


                 நான் ரகு. அனைவரையும் போல ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்பவன். ஒரு இரண்டாம் நிலை கம்பெனியில் வேலை, மாதம் 18,000 சம்பளம், வாடகை வீடு, ஒரு Splender பைக், மாதம் ஒன்றிரண்டு சினிமா, தங்கையின் திருமணம், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இப்படி எல்லோரையும் போல் வாழ்ந்து வருகிறேன். ஆனால் எனக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது.

Tuesday, March 22, 2016

வெற்றி


                                                       வெற்றி 


                 வாழ்வில் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடைந்தால் தான் வெற்றி என்று பலர் எண்ணுகின்றனர்... 
               
               ஆனால் குறிக்கோளை அடைந்தால் தான் வெற்றி என்று இல்லை. பல தடைகளை மீறி நம் குறிக்கோளை நோக்கி நடக்க தொடங்கினாலே அது வெற்றி தான்... 
             
                நம்முள் பலர் குறிக்கோளை வைத்துக்கொள்கிறோம். ஆனால் அதை நோக்கி நடக்க சிரமப்படுகிறோம்...  

Monday, March 14, 2016

காதல் தோல்வி

                               

                                                  காதல் தோல்வி 


                காதல் தோல்வி என்பது ஆண்களுக்கு மட்டும் எழுதி வைத்த ஒன்றா என்ன?? ஏன் பெண்களுக்கு காதல் தோல்வி இருக்காதா ?? 

               அவர்களுக்கும் இருக்கும். ஆனால் அவர்கள் ஆண்களை போல் புலம்பி திட்டுவது இல்லை. அதை மறந்து வாழ்வில் அடுத்த இலக்கை நோக்கி சென்று விடுகின்றனர். அதற்காக அவர்கள் காதலையும் காதலனையும்  மறந்துவிட்டார்கள் என்று இல்லை, காதல் தந்த வலிகளை தான் மறந்திருக்கிறார்கள். காதலை மறந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?? 

                பெண்கள் நம்மை போல இல்லை, அவர்களுக்கு மன வலிமை அதிகம். அவர்களை போல் இருக்க ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்... 

Saturday, March 12, 2016

இருக்கு ஆனா இல்ல



                                            இருக்கு ஆனா இல்ல 


                        ஒருத்தர்  என்னடானா தூணிலும்  இருப்பார்  துரும்பிலும் இருப்பார்னு  சொல்றாரு...

                         ஒருத்தர்  என்னடானா  கடவுளே  இல்லடா  வெங்காயம்னு சொல்றாரு...

                         ஒருத்தர்  என்னடானா  அன்பு  தான்டா  கடவுள்னு  சொல்றாரு...

                         
                         ஒருத்தர்  என்னடானா  நான்  தான்  கடவுள்னு  சொல்லிட்டு  இருக்காரு...
      
                         ஒருத்தர்  என்னடானா  இருக்கு ஆனா இல்லன்னு சொல்லறாரு...

                         இதெல்லாம்  கேக்கும்  போது  எனக்கு  ஒரே  தல  வலியா இருக்கு....

Friday, March 11, 2016

தேடல்


                                                             தேடல் 


                                      சிலர் பணத்தை தேடி ஓடுகின்றனர்
                                      சிலர் பாசத்துக்காக ஏங்குகின்றனர்
                                       சிலர் பதவிக்காக அலைகின்றனர்
                                  சிலர் பட்டம்  வாங்க ஆசைபடுகின்றனர்

               இப்படி ஒவ்வொருவரும்  ஏதோ ஒன்றை நோக்கி செல்லும் போது நீங்கள் மட்டும் ஏன் இதை படித்துக்கொண்டிருக்கிறீர்கள், போங்கள் போய் உங்கள் கனவை நனவாக்க ஓடுங்கள்... 

ஆதங்கம்





                                        ஆதங்கம் 


              சாமி  கும்பிடு  காசு  வரும்னு  சொல்லாம, உதவி  செய்  காசு  வரும்னு  சொல்லிருந்த,  பஸ் ஸ்டாண்ட் ல  சனங்கள  பாத்தவுடன்  கைய  நீட்டி  பிச்சை  எடுக்குற அந்த  சின்ன  பையன்  இப்ப  படிக்க  போயிருப்பான்... 

வாழ்க்கை பாடம்




                                                       

                                 வாழ்க்கை  பாடம் 


                        "குறுக்கு  வழியில்  வாழ்வு  தேடிடும்  குருட்டு  உலகமடா  இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்  திருட்டு  உலகமடா  தம்பி  தெரிந்து நடந்து  கொள்ளடா... தம்பி  தெரிந்து  நடந்து  கொள்ளடா... "

                          இந்த  M.G.R.  பாடலை  என்  தாத்தா  என்னை  பள்ளியில்  இருந்து கூட்டி  வரும்  போது  அடிக்கடி  பாடுவார்...  எனக்கு  அழுப்பு  தெரியக்கூடாது என்பதற்காக  பாடுகிறார்  என்று  நினைத்தேன்.  இப்பொழுது  புரிகிறது  அது வெறும்  பாடல்  அல்ல  வாழ்க்கையின்  பாடம்  என்று...  

Thursday, March 3, 2016

பெண் கல்வி

பெண்  கல்வி 


                     என்ன தான் பெண் கல்வி  சமுதாய முன்னேற்றத்தை உண்டாக்கும் என்று கூறினாலும், திருமணத்திற்கு பிறகு வீணாய் போகும் ஒவ்வொரு பெண்ணின் கல்வியும், கனவும் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கு ஒரு முட்டு கட்டையாகவே இருக்கும்... 

Thursday, February 25, 2016

நட்பு

           


                                              நட்பு 


                   உலகின்  மிக  சிறந்த  உறவு  நட்பு. அதுவும்  ஆண்  பெண்  நட்பு  என்பது  கூடுதல்  சிறப்பு...

                  தவறு  செய்யும்  போது  தந்தையாகவும், அக்கறை எடுத்துக்கொள்ளும்  தாயாகவும், சிறு  விஷயங்களுக்கு  சண்டை  போடும் தங்கையாகவும், துவண்டு  போகும்  போது  உறுதுணையாக  நிற்கும்  சிறந்த தோழியாகவும்  இருப்பவள்  அவள்...

                 ஆனால்  இச்சமுதாயமோ  இன்னும்  இந்த  நட்பை  தப்பான கண்ணோட்டத்திலேயே  பார்த்து  வருகிறது. சமுதாயத்தை  விடுங்கள், சில சமயம்  நம்  நண்பர்களே  அப்படித்தான்  நினைக்கிறார்கள். இதை  முற்றிலும் திருத்திக்கொள்ள  வேண்டும்...

அன்னை


                                         அன்னை 


                  நான் பார்த்து வியந்த பெண்களுள் என் அன்னையும் ஒருவள்...

                 சிறு வயதில் என்னை அடித்தாள் என்பதற்காக டியூஷனை நிறுத்தி எனக்கு வாத்தியாரானால்... ஆனால் அங்கு வாங்கியதை விட இவளிடமே  அதிக அடி வாங்கினேன்.  அன்றோ வீட்டு பாடத்தை கற்று கொடுத்தாள், இன்றோ வாழ்க்கை பாடத்தை...

                என்னதான் அவளுக்கு பசியாக இருந்தாலும் சாப்பிடும் போது ஒரு வாய் ஊட்டுவாளே அடடா... அதற்காக தினம்தினம் பட்டினி கிடக்கலாம்...

                 அடித்தாலும் திட்டினாலும் அடுத்த நிமிடமே கோபத்தை மறந்து அன்புடன் பேசுவாளே.. என்னால் இப்படி இருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..

Wednesday, February 24, 2016

வாழ்வின் சுவாரசியம்



                          வாழ்வின் சுவாரசியம்     


                  நம் வாழ்வில் வரும் கதாப்பாத்திரங்களுள் சிலவற்றை மறக்க நினைக்கிறோம், சிலவற்றை மறுக்க நினைக்கிறோம், சிலவற்றை மன்னிக்க நினைக்கிறோம், சிலவற்றை மணக்க நினைக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் நமக்கு நடப்பதில்லை... ஏன்???

                 ஏனென்றால், அனைத்தும் நடந்து விட்டால் வாழ்வின் சுவாரசியம் குறைந்து விடும்...

                 சுகம், துக்கம், வலி, வெறுப்பு, அன்பு, சொந்தம், பிரிவு  இவை அனைத்தும் கலந்தது  தான் வாழ்க்கை... ஒன்று மட்டுமே நிலைத்திருந்தால் அது நரகமாகிவிடும்... 

Tuesday, February 23, 2016

பிரச்சனை




                                     பிரச்சனை                                                                                               

              நான்  ஒன்று  சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள்,எனக்கு மிகவும் உதவியது. உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்...

             வாழ்வில்  நம்மை  சுற்றவைக்கும்  நம்மை  சுற்றும்  பிரச்சனைகள் வரும்  போது, "இதுவும்  கடந்து போகும்" என்று சொல்லி உங்கள்  வேலைகளை பார்க்க போங்கள் எல்லாம் சரி ஆகிவிடும்... 

Saturday, February 20, 2016

பருவக்காதல்




                                     பருவக்காதல் 


                             சீக்கிரம்  எழுந்து  குளித்து  எட்டு மணிக்கே  ஸ்கூல்கு  போறது எதுக்கு  எல்லாம்  பச்சபாவாடை  போட்டுவர  பவித்ராவை  பாக்கத்தான்...
இப்பலாம்  அவள  பிடிக்குது.  அந்த  ரெட்டசடை,  அதுல  இருக்க  கருப்பு  ரிப்பன், குண்டு  குண்டு  கண்கள்,  அந்த புருவங்களுக்கு  நடுவில்  இருக்கும் சந்தனம்,  முகத்தில்  இருக்கும்  ஒன்றிரண்டு  பருக்கள்,  கழுத்துல  இருக்க  tag  எல்லாமே  பிடிக்குது...... இதுக்கு  பேரு  தான்  காதலோ???      

Friday, February 19, 2016

கல்லூரி


                                                     



                                                       கல்லூரி 


                                                   ஒரு கனவுடனும்
                                              பல கற்பனையோடும்
                                        நிறைய எதிர்பார்ப்புகளோடும்,
                                           கொஞ்சம் பயம் கொண்டும்
                          சிலர் காதலினாலும், பலர் கம்பள்சனினாலும்
                          சிலர் பேருக்கெனவும், பலர் பேரெடுபதற்கும்
                                               வரும்  இடம் கல்லூரி...

நினைவுகள்

                                        



                                               நினைவுகள் 


                  அப்பாவின் TVS 50இன் முன்னால் உட்கார்ந்து ஊரை வேடிக்கை    பார்த்து போவது அலாதி இன்பம்...

                  Aeroplane சத்தம் கேட்டால் வாய் பிளந்து வான் பார்க்கும் பழக்கம்  இன்னும் போகவில்லை என்னை விட்டு...

                   அம்மா சொல்லும் பொருட்களை சொல்லிக்கொண்டே சென்று   அதிலும் ஒன்றிரண்டை மறந்து அம்மாவிடம் திட்டு வாங்கினதை   நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது...

                  வெள்ளிக்கிழமையே கொடுத்த Rank Cardஐ இரு தினம் கழித்து பள்ளி   வாசலில் நின்று மறந்துட்டேன் என்று சொன்னதை இன்று என் மகன் என்னிடம் சொல்கிறான்...

                  ஓரிரு ரூபாய்க்கு தாத்தா சொல்லும் வேலைகளை வேகமாக முடித்து  அதில் வாங்கி தங்கையை ஏமாற்றி தின்னும்  தேன் மிட்டாய்க்கும்  கடலை பர்பிக்கும் கோடி ரூபாய் கொடுத்தாலும் போதாது...

                  அப்பாவின் வண்டி சத்தம் கேட்டவுடம் ஓடிச் சென்று போகும் ஒரு ரவுண்டு  என்றும் இருக்கும் நீங்காத நினைவுகள்...

என் தங்கையும் ஒருவள்

                                         





                                          என் தங்கையும் ஒருவள் 



                     என்னதான் அண்ணனை கேலி செய்தாலும் மற்றவர்கள் முன்பு என் அண்ணன் என்று சொல்லும் தங்கைகளுள்  என் தங்கையும் ஒருவள்...

                    தோழிகளிடம் அண்ணனின் மானத்தை வாங்கும் தங்கைகளுள் என் தங்கையும் ஒருவள்...

                    ரொம்ப நாள் கழித்து வீடு சென்றால்,  ஊர் கதைகள் அனைத்தும் பேசும்  தங்கைகளுள் என் தங்கையும் ஒருவள்...
   
                    என்னதான் அடித்து கொண்டு தின்றாலும் தனியே தின்னாமல் அண்ணனுக்கு கொடுத்து உண்ணும் தங்கைகளுள் என் தங்கையும் ஒருவள்...