Thursday, March 24, 2016

என்னுள் நீ - பகுதி 1


                                                   என்னுள் நீ 


                 நான் ரகு. அனைவரையும் போல ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்பவன். ஒரு இரண்டாம் நிலை கம்பெனியில் வேலை, மாதம் 18,000 சம்பளம், வாடகை வீடு, ஒரு Splender பைக், மாதம் ஒன்றிரண்டு சினிமா, தங்கையின் திருமணம், சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இப்படி எல்லோரையும் போல் வாழ்ந்து வருகிறேன். ஆனால் எனக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது.

Tuesday, March 22, 2016

வெற்றி


                                                       வெற்றி 


                 வாழ்வில் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடைந்தால் தான் வெற்றி என்று பலர் எண்ணுகின்றனர்... 
               
               ஆனால் குறிக்கோளை அடைந்தால் தான் வெற்றி என்று இல்லை. பல தடைகளை மீறி நம் குறிக்கோளை நோக்கி நடக்க தொடங்கினாலே அது வெற்றி தான்... 
             
                நம்முள் பலர் குறிக்கோளை வைத்துக்கொள்கிறோம். ஆனால் அதை நோக்கி நடக்க சிரமப்படுகிறோம்...  

Monday, March 14, 2016

காதல் தோல்வி

                               

                                                  காதல் தோல்வி 


                காதல் தோல்வி என்பது ஆண்களுக்கு மட்டும் எழுதி வைத்த ஒன்றா என்ன?? ஏன் பெண்களுக்கு காதல் தோல்வி இருக்காதா ?? 

               அவர்களுக்கும் இருக்கும். ஆனால் அவர்கள் ஆண்களை போல் புலம்பி திட்டுவது இல்லை. அதை மறந்து வாழ்வில் அடுத்த இலக்கை நோக்கி சென்று விடுகின்றனர். அதற்காக அவர்கள் காதலையும் காதலனையும்  மறந்துவிட்டார்கள் என்று இல்லை, காதல் தந்த வலிகளை தான் மறந்திருக்கிறார்கள். காதலை மறந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன?? 

                பெண்கள் நம்மை போல இல்லை, அவர்களுக்கு மன வலிமை அதிகம். அவர்களை போல் இருக்க ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்... 

Saturday, March 12, 2016

இருக்கு ஆனா இல்ல



                                            இருக்கு ஆனா இல்ல 


                        ஒருத்தர்  என்னடானா தூணிலும்  இருப்பார்  துரும்பிலும் இருப்பார்னு  சொல்றாரு...

                         ஒருத்தர்  என்னடானா  கடவுளே  இல்லடா  வெங்காயம்னு சொல்றாரு...

                         ஒருத்தர்  என்னடானா  அன்பு  தான்டா  கடவுள்னு  சொல்றாரு...

                         
                         ஒருத்தர்  என்னடானா  நான்  தான்  கடவுள்னு  சொல்லிட்டு  இருக்காரு...
      
                         ஒருத்தர்  என்னடானா  இருக்கு ஆனா இல்லன்னு சொல்லறாரு...

                         இதெல்லாம்  கேக்கும்  போது  எனக்கு  ஒரே  தல  வலியா இருக்கு....

Friday, March 11, 2016

தேடல்


                                                             தேடல் 


                                      சிலர் பணத்தை தேடி ஓடுகின்றனர்
                                      சிலர் பாசத்துக்காக ஏங்குகின்றனர்
                                       சிலர் பதவிக்காக அலைகின்றனர்
                                  சிலர் பட்டம்  வாங்க ஆசைபடுகின்றனர்

               இப்படி ஒவ்வொருவரும்  ஏதோ ஒன்றை நோக்கி செல்லும் போது நீங்கள் மட்டும் ஏன் இதை படித்துக்கொண்டிருக்கிறீர்கள், போங்கள் போய் உங்கள் கனவை நனவாக்க ஓடுங்கள்... 

ஆதங்கம்





                                        ஆதங்கம் 


              சாமி  கும்பிடு  காசு  வரும்னு  சொல்லாம, உதவி  செய்  காசு  வரும்னு  சொல்லிருந்த,  பஸ் ஸ்டாண்ட் ல  சனங்கள  பாத்தவுடன்  கைய  நீட்டி  பிச்சை  எடுக்குற அந்த  சின்ன  பையன்  இப்ப  படிக்க  போயிருப்பான்... 

வாழ்க்கை பாடம்




                                                       

                                 வாழ்க்கை  பாடம் 


                        "குறுக்கு  வழியில்  வாழ்வு  தேடிடும்  குருட்டு  உலகமடா  இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்  திருட்டு  உலகமடா  தம்பி  தெரிந்து நடந்து  கொள்ளடா... தம்பி  தெரிந்து  நடந்து  கொள்ளடா... "

                          இந்த  M.G.R.  பாடலை  என்  தாத்தா  என்னை  பள்ளியில்  இருந்து கூட்டி  வரும்  போது  அடிக்கடி  பாடுவார்...  எனக்கு  அழுப்பு  தெரியக்கூடாது என்பதற்காக  பாடுகிறார்  என்று  நினைத்தேன்.  இப்பொழுது  புரிகிறது  அது வெறும்  பாடல்  அல்ல  வாழ்க்கையின்  பாடம்  என்று...  

Thursday, March 3, 2016

பெண் கல்வி

பெண்  கல்வி 


                     என்ன தான் பெண் கல்வி  சமுதாய முன்னேற்றத்தை உண்டாக்கும் என்று கூறினாலும், திருமணத்திற்கு பிறகு வீணாய் போகும் ஒவ்வொரு பெண்ணின் கல்வியும், கனவும் இந்த சமுதாய முன்னேற்றத்துக்கு ஒரு முட்டு கட்டையாகவே இருக்கும்...